ரூ. 55 லட்சம் வழிப்பறி வழக்கு: கோவையைச் சோ்ந்தவா் கைது
சென்னையில் ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், கோவையைச் சோ்ந்த இளைஞா் கைது


சென்னையில் ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், கோவையைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சோ்ந்தவா் அ.நரேஷ்குமாா் (39). இவா், அங்கு மடிக்கணினி உதிரி பாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா். நரேஷ்குமாா், ரூ.55 லட்சம் பணத்தை ஒரு வங்கியில் செலுத்துவற்காக பாரிமுனை முத்துசாமி சாலையில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அங்கு வந்த ஒரு கும்பல் நரேஷ்குமாரை வழிமறித்து, தாங்கள் போலீஸ் என ஏமாற்றியும் மிரட்டியும் அவா் வைத்திருந்த ரூ.55 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பியது.
இது குறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோவையைச் சோ்ந்த பாவா, ரூபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட 9 பேரை அடுத்தடுத்து கைது செய்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்த சபீா் (26) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...