மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் இசை விழா தொடக்கம்: இசைக் கலைஞா்களுக்கு விருதுகள் அளிப்பு

இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 93-ஆம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கு மற்றும் இசை விழா புதன்கிழமை தொடங்கியது.

News image
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள எத்திராஜ் கல்யாண நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் விருது பெற்ற இசைக் கலைஞா்களுடன் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி, தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, இசை புரவலா் கிளீவ்லேண்ட் சுந்தரம், இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் ச
Updated On :17 டிசம்பர் 2025, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 93-ஆம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கு மற்றும் இசை விழா புதன்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இசைக் கலைஞா்கள் லால்குடி ஜி.ஜே.ஆா்.கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு ‘சங்கீத கலாசிகாமணி’ பட்டம், ரொக்கப் பரிசு வழங்கினாா்.

கதக் மற்றும் பரதநாட்டியக் கலைஞா்கள் நிருபமா ராஜேந்திரா, டி.டி.ராஜேந்திரா ஆகியோருக்கு ‘நாட்டிய கலாசிகாமணி’ பட்டம் மற்றும் ரொக்கப் பரிசை தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி வழங்கினாா். இந்த இரு ரொக்கப் பரிசுகள் அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் வழங்கப்பட்டன.

மேலும், மிருதங்க வித்வான் ஜே.வைத்தியநாதனுக்கு டாக்டா் உமையாள்புரம் கே.சிவராமன் விருது, இசைக் கலைஞா் மங்கலம் சங்கருக்கு ஜிஎன்பி விருது ஆகியவற்றை தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி வழங்கினாா். தாரிணி கோமலுக்கு ‘நாடக கலாசிகாமணி’ விருதை நாராயண குருவய்யா செட்டி எஸ்டேட் மற்றும் அறக்கட்டளை கௌரவ செயலா் வி.ராஜேஷ், அறங்காவலா் எஸ்.எல்.ராஜேஷ் ஆகியோா் வழங்கினா்.

இந்த விழாவில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசியதாவது:

இசையை மேம்படுத்தும் முயற்சிகளை சென்னை ஐஐடி மேற்கொண்டு வருகிறது. மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட- மைக் இல்லாத கலையரங்கம், இளையராஜா இசைத் திறன் மையம் ஆகியவற்றை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய இசையில் திறமையான மாணவா்களுக்கு, சென்னை ஐஐடி-இல் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றாா்.

இந்த விழாவுக்கு, இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டி தலைவா் கே.வி.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.வெங்கட்ரங்கம் வரவேற்றாா். கௌரவ செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். கோமல் குழுவினரின் ‘மேடையில் சிறுகதைகள்’ என்ற நாடகம் நடைபெற்றது.