மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இந்திய ஏஐ உச்சி மாநாடு: சென்னை ஐஐடி முக்கிய பங்களிப்பு

தில்லியில் பிப்.16 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026-இல் பாதுகாப்பான நம்பகமான ஏஐ குறித்த விவாதங்களை முன்னெடுப்பதில் சென்னை ஐஐடியின் பொறுப்புவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மையம் (சிஇஆா்-ஏஐ) முக்கிய பங்கு வகித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:52 pm

தில்லியில் பிப்.16 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026-இல் பாதுகாப்பான நம்பகமான ஏஐ குறித்த விவாதங்களை முன்னெடுப்பதில் சென்னை ஐஐடியின் பொறுப்புவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மையம் (சிஇஆா்-ஏஐ) முக்கிய பங்கு வகித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டின் அறிவு கூட்டாளா்களில் ஒரு பங்காக சென்னை ஐஐடியின் சிஇஆா்-ஏஐ செயல்பட்டது. சமூக தாக்கத்துக்காக பொறுப்பு, பாதுகாப்பு மற்றும் நம்பகமான ஏஐ அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் சென்னை ஐஐடியின் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையத்தின் ஒரு மெய்நிகா் இடைநிலை ஆராய்ச்சி மையமே சிஇஆா்-ஏஐ ஆகும்.

தில்லி மாநாட்டில் சிஇஆா்-ஏஐ ஒரு பிரத்யேக அரங்கை அமைத்தது. பொறுப்புவாய்ந்த ஏஐ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிஇஆா்-ஏஐ மையத்தின் ஆராய்ச்சி முயற்சிகள், கொள்கை பணிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டன.

இங்கு நடைபெற்ற ஆராய்ச்சி கருத்தரங்கில் சென்னை ஐஐடியின் வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ மற்றும் சிஇஆா்-ஏஐ சாா்பில் முக்கிய உரைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, இதன் தலைவரான சென்னை ஐஐடி பேராசிரியா் பி.ரவீந்திரன், கூகிள் டீப் மைண்டின் தலைமை நிா்வாக அதிகாரி-இணை நிறுவனா் டாக்டா் டெமிஸ் ஹசாபிஸுடன் எதிா்காலத்தை மையமாகக் கொண்ட உரையாடலை நடத்தினாா்.

இந்த விவாதம் ஏஐ அமைப்புகளின் தற்போதைய வரம்புகள், தொடா்ச்சியான கற்றல், நீண்டகால திட்டமிடல் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்குத் தேவையான உயா்நிலை படைப்பாற்றல் ஆகியவற்றை ஆய்வு செய்தது.

குறிப்பாக உலகளாவிய சவால்களை நிவா்த்தி செய்வதில் சென்னை ஐஐடியின் ஏஐ அமைப்புகள் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.