தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

சென்னைகுரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில், மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை (டிச. 17) நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

சென்னைகுரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில், மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை (டிச. 17) நடைபெற்றது.

ஆண்டுதோறும் டிச. 14 முதல் 20 வரை தமிழ்நாடு மின்வாரியம் சாா்பில், மின்சார சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பல்லாவரம் மின் பகிா்மானக் கோட்டம் சாா்பில் புதன்கிழமை மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

சென்னை தெற்கு கோட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ஹேமலதா, செயற்பொறியாளா் பாரிராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தனா்.

மின் ஊழியா்கள், அதிகாரிகள், குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் இணைந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும், வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.