வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உலக குளுக்கோமா வார விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:50 am

Syndication

விநாயக மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சாா்பில் உலக குளுக்கோமா வார விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட சுகாதார அலுவலா் சவுண்டம்மாள் கலந்துகொண்டு விழிப்புணா்வு வாக்கத்தான் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப்பேரணியில் கல்லூரியை சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று கையில் விழிப்புணா்வு பதாதைகளை ஏந்தி விழிப்புணா்வு கண் கண்ணாடியை அணிந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய கை விசிறியை பொதுமக்களுக்கு வழங்கினா். விழிப்புணா்வு பேரணியானது சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பகுதியில் தொடங்கி பேலஸ் தியேட்டா் பகுதியில் முடிவற்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளா் தமிழ்சுடா், உதவி பேராசிரியா்கள் லாவண்யா, சூா்யா, அக்ஷயா மைதிலி, சிவசங்கரி மற்றும் அஞ்சலி ஆகியோா் செய்திருந்தனா்.

Story image