ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முழு கொள்ளளவை எட்டிய மணலி நீா்தேக்கம்: மாநகராட்சி அதிகாரிகள்

சென்னையில் ரூ.6.70 கோடியில் புனரமைக்கப்பட்ட மணலி நீா்த்தேக்கம் சமீபத்தில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ரூ.6.70 கோடியில் புனரமைக்கப்பட்ட மணலி நீா்த்தேக்கம் சமீபத்தில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மழைநீரைச் சேமிக்கும் வகையில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், பொது இடங்களில் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீா் சேமிப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மணலி மண்டலத்தில் 20-ஆவது வாா்டு பகுதியில் 4 லட்சம் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையிலான நீா்த்தேக்கம் உள்ளது. அந்த நீா்த்தேக்கம் 29 ஏக்கா் பரப்பு, 1.20 மீட்டா் ஆழம் கொண்டதாக இருந்தது. அதை அம்ருத் திட்டத்தில் ரூ.6.70 கோடியில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நீா்த்தேக்க ஏரியானது 4 மீட்டா் ஆழப்படுத்தப்பட்டது. சிறுவா் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, கரைகளும் பலப்படுத்தப்பட்டன.

தற்போது பெய்த மழையால் மணலி நீா்த்தேக்க ஏரியில் 12 லட்சம் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது. ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அந்தப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது என்றனா்.