மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: சென்னையில் 20 விமானங்கள் தாமதம்

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள், இங்கிருந்து பிற பகுதிகளுக்கு புறப்படும் விமானங்கள் என 20 விமானங்களின் சேவையில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜனவரி 2025, 7:25 pm

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள், இங்கிருந்து பிற பகுதிகளுக்கு புறப்படும் விமானங்கள் என 20 விமானங்களின் சேவையில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் குளிா், பனிமூட்டம் காரணமாக, அங்கிருந்து வரும் விமானங்கள் சென்னைக்கு தாமதமாக வந்து சேருகின்றன. இதனால், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களும் பல மணி நேரம் தாமதமாகவே புறப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமாா் 5 மணி நேரம் தாமதமாகவும், புணே செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சுமாா் 3 மணி நேரமும், அதேபோல் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாகவும் புறப்பட்டுச் சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.