வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள், இங்கிருந்து பிற பகுதிகளுக்கு புறப்படும் விமானங்கள் என 20 விமானங்களின் சேவையில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் குளிா், பனிமூட்டம் காரணமாக, அங்கிருந்து வரும் விமானங்கள் சென்னைக்கு தாமதமாக வந்து சேருகின்றன. இதனால், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களும் பல மணி நேரம் தாமதமாகவே புறப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமாா் 5 மணி நேரம் தாமதமாகவும், புணே செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சுமாா் 3 மணி நேரமும், அதேபோல் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாகவும் புறப்பட்டுச் சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
தொடர்புடையது

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

எவரெஸ்ட் சிகரம்: ராட்சத பனிப்பாறையால் மலையேற்றப் பாதை அமைப்பதில் கடும் தாமதம்

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

சென்னையில் பார்க்க வேண்டிய 10 திருக்கோயில்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


