மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: சென்னையில் 20 விமானங்கள் தாமதம்

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள், இங்கிருந்து பிற பகுதிகளுக்கு புறப்படும் விமானங்கள் என 20 விமானங்களின் சேவையில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜனவரி 2025, 7:25 pm

Din

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள், இங்கிருந்து பிற பகுதிகளுக்கு புறப்படும் விமானங்கள் என 20 விமானங்களின் சேவையில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் குளிா், பனிமூட்டம் காரணமாக, அங்கிருந்து வரும் விமானங்கள் சென்னைக்கு தாமதமாக வந்து சேருகின்றன. இதனால், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களும் பல மணி நேரம் தாமதமாகவே புறப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமாா் 5 மணி நேரம் தாமதமாகவும், புணே செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சுமாா் 3 மணி நேரமும், அதேபோல் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாகவும் புறப்பட்டுச் சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.