சென்னை சென்ட்ரலில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்கு செல்லும் சில விரைவு ரயில்கள் வரும் ஜூன், ஜூலையில் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வரும் ஜூனில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாகச் செல்லும் அசோகாபுரம் காவேரி விரைவு ரயில் (எண் 16021) வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாவும், வரும் ஜூன் 19- ஆம் தேதி வழக்கமான நேரத்திலிருந்து 1.40 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டுச் செல்லும்.
வரும் ஜூன் 19 -ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் சிட்டி அதிவிரைவு ரயில் (எண் 12657) வழக்கமான நேரத்திலிருந்து 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும்.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் அசோகாபுரம் காவேரி விரைவு ரயிலானது வரும் ஜூன் 22 -ஆம் தேதி 1.22 மணி நேரம் தாமதமாகவும், 24 -ஆம் தேதி 1.30 மணி நேரம் தாமதமாகவும், ஜூலை 7 -ஆம் தேதி 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


