சென்னை சென்ட்ரலில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்கு செல்லும் சில விரைவு ரயில்கள் வரும் ஜூன், ஜூலையில் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வரும் ஜூனில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாகச் செல்லும் அசோகாபுரம் காவேரி விரைவு ரயில் (எண் 16021) வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாவும், வரும் ஜூன் 19- ஆம் தேதி வழக்கமான நேரத்திலிருந்து 1.40 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டுச் செல்லும்.
வரும் ஜூன் 19 -ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் சிட்டி அதிவிரைவு ரயில் (எண் 12657) வழக்கமான நேரத்திலிருந்து 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும்.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் அசோகாபுரம் காவேரி விரைவு ரயிலானது வரும் ஜூன் 22 -ஆம் தேதி 1.22 மணி நேரம் தாமதமாகவும், 24 -ஆம் தேதி 1.30 மணி நேரம் தாமதமாகவும், ஜூலை 7 -ஆம் தேதி 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ஜூனில் 2 நாள்கள் முழுமையாக ரத்து

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

