சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

News image

மின்சார ரயில்கள் - கோப்புப்படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:05 pm

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) இரு புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் சிங்கபெருமாள்கோவில் மற்றும் செங்கல்பட்டு நிலையங்களில் தண்டவாள மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) முதல் ஏப். 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதனால், ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் மின்சார ரயிலும், காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியளவு ரத்து செய்யப்படும் ரயில்கள்: அதேபோல், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில், தாம்பரத்திலிருந்தும், செங்கல்பட்டிலிருந்து காலை 8.45, 9.40, 10.40 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில்கள் சிங்கபெருமாள் கோவிலிருந்தும் புறப்படும்.

அதேபோல், சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 5.35 மணிக்கு காஞ்சிபுரம் செல்லும் ரயில், வாலாஜாபாத் வரையும், கடற்கரையிலிருந்து காலை 8.10, 8.50, 9.30, 10 மணிகளுக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடனும் நிறுத்தப்படும்.

செங்கலப்பட்டிலிருந்து பகல் 11.35 மணிக்கு கடற்கரைக்கு வரும் ரயில் காட்டாங்குளத்தூரிலிருந்து இயக்கப்படும்.

ஏப். 13 முதல் 16 வரை: வரும் ஏப். 13 முதல் 16 -ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து பகல் 11.40, நண்பகல் 12.40 மணிக்கு புறம்படும் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். அதேபோல், கடற்கரையிலிருந்து நண்பகல் 12.28, 1.45 மணிக்குப் புறப்படும் ரயில்கள் காட்டாங்குளத்தூருடன் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.