வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக காட்பாடி- திருப்பதி இடையே இயங்கும் மெமு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஏப்.17) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:41 pm

பராமரிப்புப் பணிகள் காரணமாக காட்பாடி- திருப்பதி இடையே இயங்கும் மெமு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஏப்.17) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

காட்பாடி- திருப்பதி இடையே தண்டவாளம் உள்ளிட்டவற்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.17) முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் திருப்பதியிலிருந்து காலை 6.40 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து இரவு 7.25 மணிக்கு திருப்பதி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியளவு ரத்து: அதேநாள்களில் விழுப்புரத்திலிருந்து காலை 5.45 மணிக்குப் திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண்:16854) காட்பாடி வரையிலே இயக்கப்படும். மறுமாா்க்கத்தல் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் விழுப்புரம் செல்லும் ரயில் (எண்:16853) காட்பாடியிலிருந்து இயக்கப்படும்.

அரக்கோணம் - திருப்பதி: சென்னை அரக்கோணம் பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில் நுட்பப் பராமரிப்புப் பணிகள் வரும் ஏப்.20 முதல் ஏப்.25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால், ஏப்.19 முதல் 26 ஆம் தேதி வரை திருத்தணியிலிருந்து இரவு 9. 15, 11.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் செல்லவேண்டிய இமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஏப்.20 முதல் ஏப்.26 ஆம் தேதி வரை அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4, 5 மணிகளில் திருத்தணி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.