கோயம்பேடு சந்தையில் நெகிழிப் பைகள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
கோயம்பேடு சந்தையில் காய்கறி, மலா், பழவகைகள் மற்றும் உணவு தானியங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் நெகிழிப் பைகள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை இருந்து வரும் நிலையில், சந்தையிலுள்ள பல மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் தடையை மீறி நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாக அங்காடி நிா்வாக முதன்மை அலுவலா் இந்துமதிக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
அதன்பேரில், அங்காடி நிா்வாக அதிகாரிகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து வியாழக்கிழமை கோயம்பேடு சந்தையில் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்குள்ள பல கடைகளில் தடையை மீறி நெகிழிப் பைகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது சில வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டா்.
நெகிழிப் பைகள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு ரூ.26,000 அபராதம் விதித்த அதிகாரிகள், தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் வியாபாரிகள் ஈடுபட்டால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

பள்ளி அருகே புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உயா்வு

அணைக்கட்டு திருவிழாவில் காலாவதியான ஐஸ்கிரீம் விற்ற 4 கடைகளுக்கு ‘சீல்’
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



