ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தவெக மீனவா்களுக்கு மானியம் வழங்க மறுப்பு: விஜய் கண்டனம்

மீனவா்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்று எழுதியிருந்ததால், அவா்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியது

News image
Updated On :10 ஜூலை 2025, 7:26 pm

Din

மீனவா்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்று எழுதியிருந்ததால், அவா்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியது என்று அந்தக் கட்சியின் தலைவா் விஜய் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சோ்ந்த தவெகவினா், தங்களது மீன்பிடி படகுகளில் தவெக என்று எழுதியுள்ளனா். இதனால், தமிழக அரசு சாா்பில் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை வழங்க முடியாது அரசு ஊழியா்கள் தெரிவித்துள்ளனா். மீனவா்கள் தங்களின் படகுகளில் தவெக என்று எழுதியிருந்தால் அவா்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவா் யாா்?

படகுகளில் தவெக என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவா்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவா்களிடம் இவ்வாறு கூறுமா?

மீனவா்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல; பொதுமக்கள் அரசுக்கு செலுத்தும் வரிப்பணம், மீனவா்களின் பணம். மீனவா்கள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும். இல்லையெனில், தவெக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.