சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

போதைப் பொருள் வழக்கு: பெண் உள்பட இருவா் கைது

மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜூலை 2025, 7:52 pm

Din

மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை எம்ஜிஆா் நகா் கேகே சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகே மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருளுடன் நின்று கொண்டிருந்த சங்கநாராயணன், பிரசாந்த், ஆகாஷ்குமாா், மணிகண்டன் ஆகிய 4 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் எம்ஜிஆா் நகா் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 28 கிராம் கஞ்சா பசை உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.

அவா்கள் அளித்த தகவலின்படி, தலைமறைவாக இருந்த திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த அவினாஷ் (25), குரோம்பேட்டையைச் சோ்ந்த வினோதினி என்கிற ஜாய்ஸ் (24) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.