மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

போதைப் பொருள் பதுக்கியவா் கைது

பழவூா் அருகே விற்பனைக்காக போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :19 பிப்ரவரி 2026, 6:43 pm

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே விற்பனைக்காக போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழவூரில் போதைப் பொருள் விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, பழவூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான போலீஸாா் பழவூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ரோந்து சென்றனா்.

கல்யாணிபுரம் அருகே ரோந்து சென்றபோது, அரிகிருஷ்ணன் (56) என்பவரது தேநீா் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 2.5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அரிகிருஷ்ணனை கைது செய்தனா்.