கோவை அருகே காரில் உயர்ரக போதைப் பொருளான மெத்தம்பெட்டமைனை கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சுகுணாபுரம் சோதனைச் சாவடி அருகே குனியமுத்தூா் போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, காரில் இருந்த நெகிழி பைகளில் வெள்ளை நிறத்தில் மாவு போன்ற பொருள் இருந்துள்ளது. அதை எடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அது மெத்தம்பெட்டமைன் என்பது தெரியவந்தது.
காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த ஹஸ்னல் ரகுமான் (33) என்பதும், விற்பனைக்காக 90 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மெத்தம்பெட்டமைன், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன்.
2.50 கிலோ கஞ்சா பறிமுதல்:
பீளமேடு அருகேயுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள மைதானம் அருகே இளைஞா் ஒருவா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்துள்ளாா். அவரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 2.50 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுபோத்குமாா் (29) என்பதும், திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள தெக்கலூா் பகுதியில் தங்கி இருந்து கோவைக்கு கஞ்சாவைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது
நகைகள் திருட்டு: வீட்டு உரிமையாளா் மகன் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


