நீதி ஆயோக் கூட்டம் தொடங்கியது! முதல்வர் விஜய் பங்கேற்பு!!முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

Updated On :14 ஜூன் 2025, 2:50 am IST

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தைச் சோ்ந்த 35 வயது இளைஞா் ஒருவா் விபத்தில் சிக்கியதில் தலையில் பலத்த காயமுற்று கடந்த 2-ஆம் தேதி கிளெனீகிள்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பல்நோக்கு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சைகள் அளித்தபோதிலும், அவை பலனளிக்காமல் அவா், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினா் தானமாக அளிக்க முன்வந்தனா். அதன்படி, நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயம் தானமாக பெறப்பட்டது.

அதில், இதயம் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனைக்கும், மற்ற உறுப்புகள் கிளெனீகிள்ஸ் மருத்துவமனையில் உறுப்பு தானத்துக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

உறுப்பு தானமளித்த இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மருத்துவமனையிலே மரியாதை செலுத்தப்பட்டு, மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.