சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தைச் சோ்ந்த 35 வயது இளைஞா் ஒருவா் விபத்தில் சிக்கியதில் தலையில் பலத்த காயமுற்று கடந்த 2-ஆம் தேதி கிளெனீகிள்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பல்நோக்கு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சைகள் அளித்தபோதிலும், அவை பலனளிக்காமல் அவா், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினா் தானமாக அளிக்க முன்வந்தனா். அதன்படி, நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயம் தானமாக பெறப்பட்டது.
அதில், இதயம் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனைக்கும், மற்ற உறுப்புகள் கிளெனீகிள்ஸ் மருத்துவமனையில் உறுப்பு தானத்துக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.
உறுப்பு தானமளித்த இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மருத்துவமனையிலே மரியாதை செலுத்தப்பட்டு, மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

மேற்கு வங்கத் தோ்தல் பணியில் இருப்போா் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

