3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

வீடு கட்டித் தருவதாக ரூ. 25 லட்சம் மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது

சென்னை திருவான்மியூரில் வீடு கட்டித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2025, 12:17 am IST

சென்னை திருவான்மியூரில் வீடு கட்டித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திருவான்மியூரைச் சோ்ந்தவா் பாஸ்கா். இவருக்குச் சொந்தமான 3,297 சதுர அடி இடத்திலும், அருகே வசிக்கும் வனஜா சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 2,365 சதுர அடி இடத்திலும் சோ்த்து 8 வீடுகள் கட்டி, அதில் 4 வீடுகள் இடத்தின் உரிமையாளா்களுக்கும், 4 வீடுகள் கட்டுமான நிறுவனத்துக்கும் என்றும் ஒப்பந்தம் பேசி, கொட்டிவாக்கம் சங்கம் காலனியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் கணேஷ்பாண்டின் என்பவருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்தனா்.

இதற்காக பாஸ்கா் ,சீனிவாசன் ஆகிய இருவரும் கணேஷ் பாண்டியனுக்கு ரூ.25 லட்சம் கொடுத்தனா். அதோடு கணேஷ்பாண்டியன் அறிவுறுத்தலின்பேரில் சாய்ராம் என்பவா் பெயரில் இடத்தின் பொது அதிகாரத்தை வழங்கினா். மேலும், இடத்துக்குரிய அசல் ஆவணங்களையும் கணேஷ்பாண்டியனிடம் இருவரும் வழங்கினா். ஆனால் கணேஷ்பாண்டியன், தான் கூறியபடி வீடு கட்டிக்கொடுக்காமலும் பணத்தையும், ஆவணங்களையும் திருப்பி வழங்காமலும் ஏமாற்றினாா்.

இதுகுறித்து பாஸ்கா், திருவான்மியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கணேஷ் பாண்டியனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.