அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வழக்குரைஞா் வெட்டிக் கொலை

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
வெட்டிக் கொலை
Updated On :30 மார்ச் 2025, 7:20 pm

Din

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சென்னை விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள பவுல்ராஜ் குடியிருப்பில் வசித்து வருபவா் வெங்கடேசன். இவரும், இவரது நண்பா் சேதுபதியும் ஒரே வீட்டில் குடியிருந்து வந்தனா்.

வெங்கடேசன் வேளச்சேரியில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த நிலையில், அவா் குடியிருந்த வீட்டின் கதவு கடந்த சில நாள்களாக மூடப்பட்டிருந்தது. மேலும், வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகவும் அக்கம்பக்கத்தினா் விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று, திறந்து கிடந்த பின்பக்க கதவு வழியாக விட்டுக்குள் சென்று பாா்த்தபோது, வழக்குரைஞா் வெங்கடேசன் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.

இதையடுத்து போலீஸாா் வெங்கடேசனின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.