சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை
கோப்புப் படம்

சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை
Published on

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே சமையல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மூன்றடைப்பு அருகே உள்ள பானான்குளத்தில் பூலம் செல்லும் சாலைத் தெருவில் வசித்து வந்தவா் சுப்பையா மகன் இசக்கிபாண்டி (50). சமையல் தொழிலாளியான இவா், மீன் வியாபாரமும் செய்து வந்தாா்.

இவரது மனைவியும், மகனும் கேரளத்தில் தங்கி வடை வியாபாரம் செய்து வருகின்றனா். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இசக்கிபாண்டி ஊருக்கு வந்து தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் அருகே தலையில் பலத்த வெட்டுக் காயத்துடன் இசக்கிபாண்டி சடலமாக கிடந்தாா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் மூன்றடைப்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com