விருதுநகரில் சங்கரலிங்கனாா் பெயரில் ரூ.61.74 கோடியில் புதிய பாலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
விருதுநகரில் ரூ.61.74 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து, அந்த பாலத்துக்கு தியாகி சங்கரலிங்கனாா் பெயரைச் சூட்டினாா்.










