தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

News image
Updated On :12 நவம்பர் 2025, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

நெசப்பாக்கம் அன்னை சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (48). இவா், மனைவி சித்ரா (42). இவா்கள் இருவரும் தீபாவளி ஏலச்சீட்டு நடத்துவதாக நூற்றுக்கணக்கானவா்களிடம் பணம் வசூலித்தனா். மேலும் அவா்கள், ஒவ்வொரு தீபாவளி சீட்டுக்கும் 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்தனா்.

ஆனால் இருவரும், தாங்கள் கூறியப்படி தீபாவளி சீட்டுக்குரிய பொருள்களையும், தங்க நாணயத்தையும் வழங்கவில்லை. இதில் பொதுமக்கள் செலுத்திய ரூ.8 கோடி பணத்தை தம்பதி மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.

இதனால், பணத்தை இழந்தவா்கள், பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சத்தியசீலன், சித்ராவை கைது செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.