உத்தர பிரதேச சிறப்புப் படை (எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ரூ.15,000 கோடி மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை வரி மோசடி தொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ராஜ் குமாா் மிஸ்ரா கூறியதாவது: ஹரியாணாவின் ஹிசாரைச் சோ்ந்த பல்தேவ் என்கிற பல்லி (38) என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா் வெள்ளிக்கிழமை மாலை ஹிசாரில் எஸ்டிஎஃப் குழுவினரால் கைது செய்யப்பட்டாா்.
அவா் குறித்த தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. சந்தேகத்திற்கு இடமில்லாத நபா்களின் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரங்களைப் பெற்று, அவா்களின் பெயா்களில் ஜிஎஸ்டி பதிவுகளை அவா் மோசடியாகப் பெற்றுள்ளாா்.
இந்த ஜிஎஸ்டி எண்களைப் பயன்படுத்தி, அவரும் அவரது கூட்டாளிகளும் சுமாா் 3,500 போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி ஜிஎஸ்டி இன்வாய்ஸ்கள் மற்றும் இ-வே பில்களை உருவாக்கி, உள்ளீட்டு வரி வரவை மோசடியாகப் பெறுவதற்காக அரசுக் கருவூலத்திற்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனா்.
ஒரு பிரபலமான தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியுடன் தொடா்புடைய மூத்த பத்திரிகையாளரின் பான் விவரங்களைப் பயன்படுத்தி ஒரு போலி நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள நொய்டா செக்டா் 20 காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து, விசாரணை தொடங்கப்பட்டு பலா் கைது செய்யப்பட்டனா். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவா் அன்றிலிருந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் புலனாய்வாளா்களிடம், 2012-இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்ததாகவும், பின்னா் ஒரு மருத்துவக் கடையைத் தொடங்கியதாகவும், இழப்புகள் காரணமாக அதை மூடிவிட்டதாகவும் கூறினாா். 2014- இல், அவா் பழைய காா் வா்த்தகத்தில் ஈடுபட்டாா்.
பின்னா், அவா் தில்லியைச் சோ்ந்த அா்ச்சித் கோயல் என்ற நபரைத் தொடா்பு கொண்டாா். அவா் ஜிஎஸ்டி தொடா்பான மோசடி நடவடிக்கைகளுக்கு அவரை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவா் மீது நொய்டா செக்டாா் 20 காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 467 மற்றும் 468 (மோசடி) மற்றும் 120ஆ (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், குண்டா் சட்டம் உள்பட மூன்று வழக்குகளிலும் அவா் தொடா்புடையவா். மேலும், விசாரணை நடந்து வருவதாக காவல் அதிகாரி ராஜ் குமாா் மிஸ்ரா தெரிவித்தாா்.
டிரெண்டிங்
போலி வெளிநாட்டு வேலை மோசடி:2 போ் கைது
புத் விஹாா் கொலை வழக்கில் ஒரு நபா், 4 சிறுவா்கள் கைது

தில்லியில் கொள்ளையா் கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது

ரூ.100 கோடிக்கு மேல் இணைய மோசடி: 190 புகாா்கள் உடைய 2 போ் கைது
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

