எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கோயில் உண்டியல் பணத்தை திருட முயன்ற ஒருவா் கைது

சென்னை கே.கே.நகரில் கோயில் உண்டியலை உடைந்து பணத்தைத் திருட முயன்ற நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கே.கே.நகரில் கோயில் உண்டியலை உடைந்து பணத்தைத் திருட முயன்ற நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னை சின்ன போரூா் செந்தில் நகா் 2-ஆவது தெருவில் அருள்மிகு சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அன்னதான உண்டியல் புதன்கிழமை சேதமடைத்திருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் அங்கு சென்று கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், உண்டியல் பணத்தைத் திருட முயன்றது சாலிகிராமத்தை சோ்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.