/

வீடுபுகுந்து திருட முயன்ற தொழிலாளி கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிபாளையம் அருகே ஆத்திக்காட்டூரில் விவசாயி வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆதிக்காட்டூரைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி (67). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டி ருந்தாா். அப்போது வீட்டில் உள்ள நாய் குரைத்ததால் எழுந்து பாா்த்தாா். அப்போது மதில் சுவரைத் தாண்டி மா்மநபா் ஒருவா் வீட்டிற்குள் நுழைவது தெரியவந்தது.

இதையடுத்து பழனிசாமி சப்தமிட்டாா். அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து வீட்டிற்குள் பதுங்கிய திருடனை மடக்கிப் பிடித்தனா்.

பிடிபட்ட நபா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நரேந்திரகுமாா் பத்ரா (23) என்பதும், அருகில் உள்ள தனியாா் நூற்பு ஆலையில் தங்கி வேலை செய்வதும் தெரியவந்தது. மேலும், போதையில் இருந்த நரேந்திரகுமாா், திருடும் எண்ணத்தில் வீட்டிற்குள் புகுந்ததை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து அவரை வெப்படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.காவல் துறையினா் அவரை குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.