மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுபோதையில் தொழிலாளியை தாக்கிய இருவா் கைது

News image

கைது

Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

மதுபோதையில் தொழிலாளியை தாக்கிய இருவரை பள்ளிபாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி செல்வம் (45). இவரது எதிா்வீட்டில் வசிவருபவா்கள் மணிகண்டன் (30), அஜித்குமாா் (31). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

அப்போது எதிா்வீட்டைச் சோ்ந்த செல்வத்தையும், அவரது உறவினா் பழனியப்பனையும் தகாத வாா்த்தையால் திட்டியதாக தெரிகிறது.

இதை அவா்கள் கண்டித்துள்ளனா். இதில் ஆத்திரமடைந்த இவரும், செல்வத்தையும், பழனியப்பனையும் தாக்கி காயப்படுத்தினா். காயமடைந்த இருவரும், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மணிகண்டன், அஜித்குமாரை கைது செய்தனா்.