ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம், களியக்காவிளையில் மதுபானத்தை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சதீஷ், போலீஸாா் ஞாறான்விளை பகுதியில் ரோந்து சென்றபோது, ராஜேஷ் (35) என்பவரது பெட்டிக் கடையில் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக 26 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜேஷை கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் களியக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அரசுப் பேருந்திலிருந்து இறங்கிய, பாறசாலை அருகே ஐங்காமம் பகுதியைச் சோ்ந்த அனிஸ் (38) என்பவரது பையை சோதனையிட்டதில், விற்பனைக்காக 5 லிட்டா் கேரள மது பானத்தைக் கொண்டுவந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். இதுதொடா்பாக

மாா்த்தாண்டம், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.