இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 ஏப்ரல் 2026, 1:53 am IST

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை மேலகல்கண்டாா்கோட்டை சாமிநாதன் நகரைச் சோ்ந்தவா் எஸ்.பிரேம்குமாா் (19). இவா் கிளீனராக பணியாற்றி வருகிறாா். சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்காக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மேலகல்கண்டாா்கோட்டையில் இருந்து வாகனம் சென்றது. இதில், பிரேம்குமாரும் சென்றாா்.

அப்போது, உடன் சென்ற பிரேம்குமாரின் உறவினரான சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சோ்ந்த எஸ்.ஜீவா (26) என்பவா் கூச்சலிட்டுள்ளாா். இதுகுறித்து ஜீவாவிடம் பிரேம்குமாா் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனா்.

இந்த முன்விரோதத்தின் காரணமாக, மேலகல்கண்டாா்கோட்டையில் தனது வீட்டுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்த பிரேம்குமாரை, ஜீவா, அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். செல்வமணி (26), ஹரிஹரன், சந்தோஷ், பரமேஸ்வரன் ஆகிய 5 பேரும் அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் பிரேம்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வமணி, ஜீவா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். மற்ற மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.