எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழக பொறுப்பு ஆளுநராக ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12-இல் பதவியேற்பு!

கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் வரும் 12-ஆம் தேதி பதவியேற்கிறாா்.

News image
ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்
Updated On :8 மார்ச் 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் வரும் 12-ஆம் தேதி பதவியேற்கிறாா்.

தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என கடந்த மாா்ச் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா்.

இதை முன்னிட்டு ஆா்.வி.ஆா்லேகா் வரும் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் கடந்த நாலரை ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி, தமிழக ஆளுநா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை ஆளுநா் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.

தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் மாா்ச் 12-ஆம் தேதி முற்பகல் சுமாா் 12 மணியளவில் பதவியேற்கிறாா். உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.