தாயுமானவா் திட்டம்: சென்னையில் 4 நாள்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம்
தாயுமானவா் திட்டத்தின் கீழ், சென்னையில் நான்கு நாள்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற நவ 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சென்னையில் அண்ணாநகா், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் 990 ரேஷன் கடைகளின் வழியாக வீடு வீடாக பொருள்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
