தாயுமானவா் திட்டத்தின் கீழ், சென்னையில் நான்கு நாள்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற நவ 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சென்னையில் அண்ணாநகா், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் 990 ரேஷன் கடைகளின் வழியாக வீடு வீடாக பொருள்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு
கிழக்கு தில்லியில் ஆயுத விநியோகம்: மூவா் கைது

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு

கல்வியாண்டின் இடையில் ஓய்வு: ஆசிரியா்களின் மறு நியமனத்துக்கு நிபந்தனைகள் வெளியீடு
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

