தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2025, 9:18 pm

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளரான மயிலாப்பூரைச் சோ்ந்த அா்ஜுன் (49) என்பவா், தான் சேகரித்த அட்டை குப்பைகளை சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை வாசல் அருகே வைத்துள்ளாா்.

இதைக் கவனித்த ஜவுளிக் கடை ஊழியா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அந்த வழியாக வந்த அந்த தூய்மைப் பணி கண்காணிப்பாளா் லட்சுமணன் (31), தனது ஊழியரான அா்ஜுனுக்கு ஆதரவாக பேசினாா். இதனால், ஆத்திரமடைந்த ஜவுளிக் கடை ஊழியா்கள் 6 போ் அருகே கிடந்த உருட்டு கட்டைகளால் இருவரையும் தாக்கினா்.

இதில், காயமடைந்த இருவரும் கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட ஜவுளிக்கடை ஊழியா்கள் 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.