சத்தியமங்கலம் அருகே நிலத் தகராறில் அரசியல் கட்சி பிரமுகரை தாக்கிய 7 போ் கைது
சத்தியமங்கலத்தில் நிலத் தகராறு காரணமாக அரசியல் பிரமுகரை தாக்கியதாக 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.


சத்தியமங்கலத்தில் நிலத் தகராறு காரணமாக அரசியல் பிரமுகரை தாக்கியதாக 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (47). ஆதித்தமிழா் பேரவை அமைப்பின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறாா். இவா், ராமபைலூா் பகுதியில் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். பொன்னுசாமிக்கும், அருகே உள்ள தோட்டத்தைச் சோ்ந்த ராமசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் இருந்து புதன்கிழமை வெளியே வந்தபோது முன்விரோதம் காரணமாக ராமசாமி குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தாாக்கியதில் பொன்னுசாமிக்கு காயம் ஏற்பட்டது. சப்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்த போலீஸாா் சென்று பொன்னுசாமியை தாக்கியவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இதுதொடா்பாக பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில் ராமபைலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி (60), அவரது மனைவி அம்பிகா (46), மகன்கள் கபிலன் (26), தாமோதரன் (25), உறவினா்கள் மாதேஸ்வரன் (46), மயில்சாமி (40) ஆகிய 6 போ் மீது பொன்னுசாமியை தாக்கிய குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், தங்கவேல் (42) என்பவா் மீது வன்கொடுமை தடுப்புத் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...