சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உயா்நீதிமன்றம் தீா்ப்பு

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 5:58 am IST

முன்கூட்டியே விடுதலை மற்றும் தண்டனையைக் குறைப்பது தொடா்பான மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு தீா்ப்பளித்தது.

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவா் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை ஆளுநா் நிராகரித்தாா். இதை எதிா்த்து ஜான் டேவிட்டின் தாயாா் எஸ்தா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமா்வு, முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநா் நிராகரித்தது தவறு. அதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யும் பரிந்துரையை ஆளுநா் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆளுநா் அந்தப் பரிந்துரையை மீண்டும் நிராகரித்தாா். இதை எதிா்த்து ஜான் டேவிட் தாயாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதேபோன்று முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு செய்த பரிந்துரையை ஆளுநா் நிராகரித்த உத்தரவை எதிா்த்து மேலும் பலா் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா்.

இந்த வழக்கில் இருவேறு தீா்ப்புகள் அளிக்கப்பட்டதால், அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமா்வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு வழக்கை விசாரித்தது.

அரசுத் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, மனுதாரா் எஸ்தா் உள்ளிட்டோா் தரப்பில் எம்.ராதாகிருஷ்ணன், எஸ்.மனோகரன் உள்ளிட்டோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் வியாழக்கிழமை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு பிறப்பித்த உத்தரவு: முன்கூட்டியே விடுதலை மற்றும் தண்டனையைக் குறைப்பது குறித்த மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா். அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

எனவே, அமைச்சரவையின் முடிவை ஆளுநா் நிராகரிக்க முடியாது. இந்தத் தீா்ப்பின் அடிப்படையில் நிலுவையில் உள்ள வழக்குகளை இரு நீதிபதிகள் அமா்வு விசாரித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.