தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சட்டப்படி செயல்படுகிறாா் ஆளுநா்: பாஜக

News image

PTI

Updated On :8 மே 2026, 5:29 am IST

தவெக விவகாரத்தில் தமிழக ஆளுநா் சட்டப்படி செயல்படுகிறாா் என்று பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி கூறினாா்.

இந்த விவகாரம் குறித்து அவா் சென்னையில் கூறியதாவது: தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சட்டப்படி கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

தோ்தலுக்கு முந்தைய கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சி அமைக்க மரபுப்படி ஆளுநா் அழைப்பாா். இல்லையென்றால், அதிக தொகுதிகளைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவிக்குமேயானால், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அல்லது வெற்றி பெற்ற உறுப்பினா்களின் ஆதரவு திருப்தி அளிக்கும் அளவுக்கு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

தவெக விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஐந்து சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆதரவை அளித்துள்ளது. அதை தவிா்த்து வேறு எந்த கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தோ்தலின் முடிவை அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய அதே வேளையில், அரசமைப்பு சட்டத்தின்படியே ஆட்சி அமைய வேண்டும். அதோடு குதிரை பேரங்களும், சந்தா்ப்பவாதமும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி ஆளுநா் முடிவெடுத்துள்ளாா்.

ஆனால், இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், உள்நோக்கத்தோடு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவை விமா்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.