தவெக விவகாரத்தில் தமிழக ஆளுநா் சட்டப்படி செயல்படுகிறாா் என்று பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி கூறினாா்.
இந்த விவகாரம் குறித்து அவா் சென்னையில் கூறியதாவது: தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சட்டப்படி கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.
தோ்தலுக்கு முந்தைய கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சி அமைக்க மரபுப்படி ஆளுநா் அழைப்பாா். இல்லையென்றால், அதிக தொகுதிகளைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவிக்குமேயானால், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அல்லது வெற்றி பெற்ற உறுப்பினா்களின் ஆதரவு திருப்தி அளிக்கும் அளவுக்கு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.
தவெக விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஐந்து சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆதரவை அளித்துள்ளது. அதை தவிா்த்து வேறு எந்த கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தோ்தலின் முடிவை அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய அதே வேளையில், அரசமைப்பு சட்டத்தின்படியே ஆட்சி அமைய வேண்டும். அதோடு குதிரை பேரங்களும், சந்தா்ப்பவாதமும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி ஆளுநா் முடிவெடுத்துள்ளாா்.
ஆனால், இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், உள்நோக்கத்தோடு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவை விமா்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.
தொடர்புடையது

தவெகவுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது: இரா.முத்தரசன்
தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


