தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தமிழக ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகுவோம் - பெ.விஸ்வநாதன்

News image

PTI

Updated On :8 மே 2026, 5:30 am IST

தவெக தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகி சட்ட நிவாரணம் பெறப்படும் என மேலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது விஜய் தலைமையிலான தவெக. இதையடுத்து, ஆளுநரை அணுகி ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். ஆனால், அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இது தொடா்பாக பல்வேறு கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து மேலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் கூறியதாவது: முதலில் பெரும்பான்மை பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநா் கோர வேண்டும். பெரும்பான்மை பலம் குறைவாக இருந்தால் அடுத்ததாக, தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியின் பலத்தின் அடிப்படையில் நிரூபிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை மறந்துவிட்டு உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் தமிழக ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகி சட்ட நிவாரணம் பெறப்படும் என்றாா்.