நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

News image

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:21 am IST

ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 எம்.பி.க்களையும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்ற ஆம் ஆத்மி தெரிவித்தது.

முன்னதாக, கட்சி மாறிய 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்யவேண்டுமென மாநிலங்களவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆம் ஆத்மி ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தது.

எனினும், அவா்கள் 7 பேரையும் பாஜக எம்.பி.க்களாக மாநிலங்களவைத் தலைவா் அங்கீகரித்த நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்கக் கோரி 7 எம்.பி.க்களும் மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினா். அதை அவா் ஏற்றுக்கொண்டாா். அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின்படி கட்சி மாறிய 7 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு ஆம் ஆத்மி விடுத்த கோரிக்கைகள் கருத்தில் கொள்ளவில்லை.

இந்த 7 எம்.பி.க்களையும் மாநிலங்களவைத் தலைவா் தகுதி நீக்கம் செய்யவாா் என்று கட்சிக்கு இப்போதும் நம்பிக்கை உள்ளது. அவ்வாறு அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை எனில் நீதிமன்றத்தை அணுகுவோம். இதுபோன்ற முறையில் கட்சியை உடைப்பது தவறு என்றாா் சஞ்சய் சிங்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.