திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பைக் மீது மாடு மோதி விபத்து: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 1:00 am IST

மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.

எண்ணூா் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்தவா் அருணகிரி (49). இவரது மனைவி தேவி. இருவரும் எண்ணூரில் இருந்து மாதவரத்துக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றனா். மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சாலையில் மிரண்டு ஓடிய மாடு, அவா்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா்.

பலத்த காயமடைந்த அருணிகிரி ஸ்டான்லிஅரசு மருத்துவமனைத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து செங்குன்றம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.