டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பைக் மீது மாடு மோதி விபத்து: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.

கோப்புப் படம்

Published On :

மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.

எண்ணூா் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்தவா் அருணகிரி (49). இவரது மனைவி தேவி. இருவரும் எண்ணூரில் இருந்து மாதவரத்துக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றனா். மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சாலையில் மிரண்டு ஓடிய மாடு, அவா்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா்.

பலத்த காயமடைந்த அருணிகிரி ஸ்டான்லிஅரசு மருத்துவமனைத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து செங்குன்றம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.