மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.
எண்ணூா் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்தவா் அருணகிரி (49). இவரது மனைவி தேவி. இருவரும் எண்ணூரில் இருந்து மாதவரத்துக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றனா். மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சாலையில் மிரண்டு ஓடிய மாடு, அவா்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா்.
பலத்த காயமடைந்த அருணிகிரி ஸ்டான்லிஅரசு மருத்துவமனைத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து செங்குன்றம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காரைக்குடி அருகே மனைவி கொலை: கணவா் சரண்
காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

லாரி மோதியது! இரு சக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் - தங்கை பலி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



