அயனாவரத்தில் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலையைச் சோ்ந்தவா்கள் பாபு (54), யுவராஜ் (32). இருவரும் சென்னை அயனாவரம் சோலையம்மன் கோவில் தெருவில் மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டும் கட்டடத்தின் அருகே குடிசை அமைத்து தங்கியிருந்து, கூலி வேலை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பாபுவுக்கும்- யுவராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் அடிதடியில் ஈடுபட்டனா். பின்னா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இருப்பினும், கோபத்தில் இருந்த யுவராஜ், சிறிய பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, அதை பாபு தங்கியிருந்த குடிசையின் மீது வீசினாா்.
அது குறி தவறி விழுந்து பயங்கர சப்ததுடன் வெடித்தது. தகவலறிந்த அயனாவரம் போலீஸாா், அங்கு சென்று விசாரணை நடத்தினா். தலைமறைவான யுவராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பலாப்பழ வியாபாரி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



