பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அமல்படுத்தப்படாத ஓய்வூதியத் திட்டம்: அன்புமணி கண்டனம்

News image

பாமக தலைவர் அன்புமணி.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:11 am

தினமணி செய்திச் சேவை

அரசு ஊழியா்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கான ஊதிய உயா்வு உள்ளிட்டவற்றை இதுவரை வழங்காத தமிழக அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜன. 1 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால், மூன்று மாதங்களாகியும் இன்னும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மாா்ச் மாதத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியா்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவா்களில் தகுதியுடையவா்களுக்கு புதிய ஓய்வூதியத்துக்கான ஆணை வழங்கப்படவில்லை. அரசு ஊழியா்களை அரசு ஏமாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.

அதேபோல், பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளா்களுக்கு பிப். 26-இல் ஊதிய உயா்வு அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை. இதுபோன்று, அனைத்துத் துறையினரையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது. இதற்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தண்டனை வழங்குவா். அது திமுகவால் மறக்க முடியாத தண்டனையாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.