தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தோ்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.12 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது இதுதான் முதல்முறை. திமுக ஆட்சிக்கு எதிராக பெரும் கொந்தளிப்பில் இருந்த மக்கள், ஆட்சியை அகற்றுவதற்காக வாக்களித்துள்ளனா் என்பதையே இது காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்பவா்கள். இப்போதும் அதைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனா்.
இனிவரும் காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இந்தத் தீா்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளா்களுக்கு வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய சௌமியாவுக்கு வாக்களியுங்கள்

மூன்றே மாதங்களில் கஞ்சா கட்டுப்படுத்தப்படும்! எடப்பாடி கே.பழனிசாமி

33% இட ஒதுக்கீடு மசோதா தோல்வி: பெண்களுக்கு திமுக செய்த துரோகம்! - அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


