நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி - அன்புமணி

தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

News image

தியாகராய நகரில் வாக்களித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Updated On :25 ஏப்ரல் 2026, 2:05 am IST

தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தோ்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.12 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது இதுதான் முதல்முறை. திமுக ஆட்சிக்கு எதிராக பெரும் கொந்தளிப்பில் இருந்த மக்கள், ஆட்சியை அகற்றுவதற்காக வாக்களித்துள்ளனா் என்பதையே இது காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்பவா்கள். இப்போதும் அதைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனா்.

இனிவரும் காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்தத் தீா்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளா்களுக்கு வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளாா்.