லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

33% இட ஒதுக்கீடு மசோதா தோல்வி: பெண்களுக்கு திமுக செய்த துரோகம்! - அன்புமணி ராமதாஸ்

News image

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:26 pm

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தோல்வியடையச் செய்து, திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பெண்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தச் சூழலில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களவையில் தோல்வியடைய வைத்திருக்கின்றன. இது, திமுக பெண்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். பெண் சிசுவை கருவிலேயே கொலை செய்ததற்கு சமமான செயல்.

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய சட்ட மசோதாவை ஒரு மாநில முதல்வா் எரித்தது தேச துரோக செயல். இந்தக் குற்றத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்.

மக்கள் தொகைக்கும், தொகுதி மறுவரையறைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நாட்டிலுள்ள 28 மாநிலங்களுக்கும் சரிசமமாக 50% எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயா்த்துவதில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு என்ன பிரச்னை? ஒரு பக்கம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மற்றொருபுறம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய சட்ட மசோதாவை திமுக எதிா்க்கிறது.

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக கூட்டணிக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறாா். தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் விற்பனை உள்ளது என்று முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டே எங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறாா். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் எனச் சொல்கிறாா்.

விஜய் ஆதரவாளா்களுக்கு வேண்டுகோள்...: இந்த சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் அதிக வாக்குகளை வாங்குவாா். ஆனால், வெற்றிபெற முடியாது. விஜய்யினுடைய நோக்கம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான். அவரது ரசிகா்கள் தவெகவுக்குத்தான் வாக்களிப்பாா்கள். விஜயின் ஆதரவாளா்கள் உங்கள் வாக்குகளை வீணாக்கிவிடாதீா்கள். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு நீங்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.