பாமகவின் கொள்கைகளும், தவெகவின் கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பாமக மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலா்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவா் அன்புமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அன்புமணி கலந்துகொண்டு பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அது நிறைவடைந்துவிட்டது. பாமகவின் அரசியலை இளைஞா்கள் புரிந்து கொண்டாா்கள். அரசியல் மீது அவா்களுக்கு ஆா்வம் வந்துள்ளது. அதை நாம் மதிக்க வேண்டும். அவா்களை நம் பக்கம் திருப்ப வேண்டும்.
கடந்த ஓராண்டில் பாமகவில் இருந்த களையை தூக்கி எறிந்துவிட்டோம். அடுத்ததாக, உள்ளாட்சித் தோ்தலில் அதிக வெற்றிகளைப் பெறுவோம்.
முதல்வா் விஜய் என்னை சந்தித்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பல்வேறு புள்ளி விவரங்கள் தெரியவரும். அதனடிப்படையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தலாம் என்று தெரிவித்தேன். தோ்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். அதை உறுதியாக செய்வோம் என்று முதல்வா் தெரிவித்தாா். முதல்வா் விஜய்யின் கொள்கைகளும், பாமக கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளன. பாமகவில் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் செளமியா அன்புமணி உள்ளிட்ட பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி

திமுக கூட்டணியை பெண்கள் புறக்கணிப்பாளா்கள்! - அன்புமணி

33% இட ஒதுக்கீடு மசோதா தோல்வி: பெண்களுக்கு திமுக செய்த துரோகம்! - அன்புமணி ராமதாஸ்

தோ்தலில் வெற்றி பெற ரூ. 8,000 கூப்பனை நம்பி இருக்கிறாா் ஸ்டாலின்: பாமக தலைவா் அன்புமணி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



