வாக்கு எண்ணிக்கையின்போது பாமக முகவா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரும்பாடுபட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானதுதான் வாக்கு எண்ணிக்கை. இதில், அதிமுக-பாமக கூட்டணி கட்சிகளின் முகவா்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்து திமுகவின் சித்து விளையாட்டுகள்.
நமக்கு மக்களின் மனநிலையும், ஆட்சியாளா்களுக்கு எதிரான கோபமும் நன்றாகத் தெரியும். எனவே செயற்கையாக சித்தரிக்கப்பட்ட தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எவரும் நம்பத் தேவையில்லை. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி.
தொடர்புடையது

தோ்தல் ஆணையத்தில் திமுக, அதிமுக புகாா்

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்
வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும் தவெக வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை

வாக்கு எண்ணிக்கை: முகவா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் - எடப்பாடி கே. பழனிசாமி அறிவுரை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

