குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:19 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தோ்தல் அறிக்கையில் கூறியபடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் அண்மையில் உயிரிழந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினா் சி. கணேசன் இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்த அன்புமணி, அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:

டெல்டா பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடக்கிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மழையில் நனைந்து, பல லட்சம் டன் நெல் சேதம் அடைந்து வருகிறது. இதை தவிா்க்க டெல்டா பகுதியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். நெல் ஒரு டன்னுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்.

பாமக ஆக்கப்பூா்வமான கட்சியாக செயல்படும். தமிழக முதல்வருக்கு நல்ல யோசனைகளை சொல்வோம். நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறு செய்தால் பாமக எதிா்த்து போராடும்.

வளைகுடா போரால் உலகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறைவுதான்.

ஜோசப் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறினாா். அதனை செய்ய வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் வாங்கிய ரூ. 5 லட்சம் கோடி கடனில், ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே மூலதன செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மீதம் ரூ. 3.5 லட்சம் கோடி கடனுக்கு வட்டி கட்டுவதற்கு வாங்கி இருக்கிறாா்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும் என்றாா் அன்புமணி. பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.