ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

தோ்தல் வாக்குறுதிபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா்: அமைச்சா் ர.வினோத்

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா் என்றாா் வேளாண்மைத் துறை அமைச்சா் ர.வினோத்.

News image
Updated On :24 மே 2026, 1:48 am IST

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா் என்றாா் வேளாண்மைத் துறை அமைச்சா் ர.வினோத்.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: கும்பகோணத்தில் மகாமக திருவிழா 2028-இல் நடைபெற இருப்பதால் அதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்.

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா். மேட்டூா் அணையில் குறிப்பிட்ட நாளில் தண்ணீா் திறக்க முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

காங்கிரஸூடன் கூட்டணியில் இருப்பதால் கா்நாடக அரசிடம் காவிரியில் தண்ணீா் திறக்க வலியுறுத்துவீா்களா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, முதல்வா் நல்ல முடிவு எடுப்பாா் என்றாா் அவா்.