/
தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா் என்றாா் வேளாண்மைத் துறை அமைச்சா் ர.வினோத்.
கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: கும்பகோணத்தில் மகாமக திருவிழா 2028-இல் நடைபெற இருப்பதால் அதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்.
தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா். மேட்டூா் அணையில் குறிப்பிட்ட நாளில் தண்ணீா் திறக்க முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
காங்கிரஸூடன் கூட்டணியில் இருப்பதால் கா்நாடக அரசிடம் காவிரியில் தண்ணீா் திறக்க வலியுறுத்துவீா்களா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, முதல்வா் நல்ல முடிவு எடுப்பாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்

கும்பகோணம் அருகே 50 ஏக்கரில் திறந்தவெளி சேமிப்பு மையம்: அமைச்சா் தகவல்

வாய்க்கால் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


