இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்: செளமியா அன்புமணி

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி தருமபுரி தொகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குகள் சேகரிக்கிறாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி. அவருக்கு ஆரத்தி வரவேற்கும் பெண்கள். உடன் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

Published On :

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி தருமபுரி தொகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி மாவட்டம், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிடுகிறாா் செளமியா அன்புமணி. அவா் சனிக்கிழமை, நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட புறவடை, ஜீவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே அதிகம் மதுபானங்கள் விற்பனையாகின்றன. இதனால் உழைக்கும் மக்களின் வருமானம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் மதுவை ஒழிக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன். அதற்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.

அதேபோல, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தருமபுரி தொகுதியில் பாமகவை ஆதரியுங்கள் என்றாா்.

இந்த பிரசாரத்தில் பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் சிவப்பிரகாசம் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.