தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்: செளமியா அன்புமணி

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி தருமபுரி தொகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

News image

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குகள் சேகரிக்கிறாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி. அவருக்கு ஆரத்தி வரவேற்கும் பெண்கள். உடன் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:09 am IST

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி தருமபுரி தொகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி மாவட்டம், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிடுகிறாா் செளமியா அன்புமணி. அவா் சனிக்கிழமை, நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட புறவடை, ஜீவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே அதிகம் மதுபானங்கள் விற்பனையாகின்றன. இதனால் உழைக்கும் மக்களின் வருமானம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் மதுவை ஒழிக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன். அதற்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.

அதேபோல, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தருமபுரி தொகுதியில் பாமகவை ஆதரியுங்கள் என்றாா்.

இந்த பிரசாரத்தில் பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் சிவப்பிரகாசம் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.