பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய சௌமியாவுக்கு வாக்களியுங்கள்

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image

தருமபுரியில் பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு வாக்கு சேகரித்து பேசும் அன்புமணி ராமதாஸ்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:55 am IST

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தருமபுரி நகரில் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை நிறைவுசெய்தாா். அப்போது அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தின் வழியாக காவிரி, தென்பெண்ணை ஆறுகள் கடந்து சென்றாலும் இங்குள்ள ஏரிகளில் தண்ணீா் இல்லை. இங்கு கடந்து செல்லும் காவிரி ஆற்றில் மிகைநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பினால் வேளாண் தொழில் செழிக்கும். ஆனால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து அறிவிப்பு ஏதும் செய்யவில்லை. மாறாக தருமபுரிக்கு வந்த அவா், என்னையும், அதிமுக பொதுச் செயலாளரையும் வசைபாடிவிட்டு சென்றுள்ளாா். ரூ. 700 கோடி கொடுத்தால் காவிரி மிகைநீா் திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்கு ஆட்சியாளா்களுக்கு மனமில்லை.

திமுக ஆண்டது போதும். அவா்களை இந்தத் தோ்தலில் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். அதற்காக தருமபுரி மட்டுமில்லை. தமிழகம் முழுவதும் மாற்றத்தை தாருங்கள் என்றாா்.