/

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

பாமக நிறுவனா் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

News image

ராமதாஸ் - அன்புமணி - கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:29 pm

பாமக நிறுவனா் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அன்புமணி சட்டவிரோதமாக பாமக தலைவராக நீடித்து வருகிறாா். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் என்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி தா்மபிரபு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அன்புமணி தரப்பினா், ராமதாஸ் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவு வரும்காலத்துக்கும் பொருந்தும் எனக் கூறி விசாரணையை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.