தோ்தல் பிரசாரத்தில் தனது புகைப்படத்தை தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாமகவின் பெயா், கட்சிக் கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக்கூறி அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில், சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதில், அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா். அன்புமணி சட்டவிரோதமாக பாமக தலைவராக நீடித்து வருகிறாா். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் என்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி தா்மபிரபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஏப்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது

வேட்பாளா்கள் கணக்கு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்: சுயேச்சைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

அதிமுகவில் உரிமையியல் வழக்குகளை திரும்பப் பெற ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன் மனு தாக்கல்

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



