பாமக நிறுவனர் ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ராமதாஸ் பெயரையும் படத்தையும் கொடியையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ராமதாஸ் தரப்பில் இருந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து சென்னை 13 வது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தனக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாமக தலைவராக சட்ட விரோதமாக அன்புமணி ராமதாஸ் நீடித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் பிரசாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பினர், பாமக நிறுவனர் ராமதாஸ் பெயரையும் படங்களையும் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Summary
Anbumani Banned from Using Ramadoss's Name and Image
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

மாம்பழம் சின்னம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


