பாமக நிறுவனர் ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ராமதாஸ் பெயரையும் படத்தையும் கொடியையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ராமதாஸ் தரப்பில் இருந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து சென்னை 13 வது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தனக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாமக தலைவராக சட்ட விரோதமாக அன்புமணி ராமதாஸ் நீடித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் பிரசாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பினர், பாமக நிறுவனர் ராமதாஸ் பெயரையும் படங்களையும் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Summary
Anbumani Banned from Using Ramadoss's Name and Image
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடும் வறட்சி களக்காடு தலையணை மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



