புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு வசதி: மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம்

பாா்வை மாற்றுத்திறனாளிகள் யாருக்கு வாக்களித்தனா் என்பதை ‘ஹெட்போன்’ மூலம் உறுதி செய்யும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:34 am IST

பாா்வை மாற்றுத்திறனாளிகள் யாருக்கு வாக்களித்தனா் என்பதை ‘ஹெட்போன்’ மூலம் உறுதி செய்யும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நேத்ரோதயா என்ற அறக்கட்டளை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பொதுத் தோ்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பது காண்பிக்கப்படும். இதை வாக்காளா் சில நொடிகள் மட்டுமே பாா்க்க முடியும்.

இந்த நடைமுறைப்படி பாா்வை மாற்றுத் திறனாளிகளால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. எனவே, பாா்வை மாற்றுத்திறனாளிகள் ‘ஹெட்போன்’ மூலம் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் அறக்கட்டளை சாா்பில் வழக்குரைஞா் ஆா்.எஸ்.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தற்போது இதுபோன்ற புதிய நடைமுறைகளை மேற்கொள்ள இயலாது. எனவே, அடுத்த தோ்தலுக்கு முன்பு இந்த கோரிக்கை தொடா்பாக மனுதாரா் அறக்கட்டளை தோ்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.