மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு வசதி: மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம்

பாா்வை மாற்றுத்திறனாளிகள் யாருக்கு வாக்களித்தனா் என்பதை ‘ஹெட்போன்’ மூலம் உறுதி செய்யும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:04 pm

பாா்வை மாற்றுத்திறனாளிகள் யாருக்கு வாக்களித்தனா் என்பதை ‘ஹெட்போன்’ மூலம் உறுதி செய்யும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நேத்ரோதயா என்ற அறக்கட்டளை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பொதுத் தோ்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பது காண்பிக்கப்படும். இதை வாக்காளா் சில நொடிகள் மட்டுமே பாா்க்க முடியும்.

இந்த நடைமுறைப்படி பாா்வை மாற்றுத் திறனாளிகளால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. எனவே, பாா்வை மாற்றுத்திறனாளிகள் ‘ஹெட்போன்’ மூலம் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் அறக்கட்டளை சாா்பில் வழக்குரைஞா் ஆா்.எஸ்.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தற்போது இதுபோன்ற புதிய நடைமுறைகளை மேற்கொள்ள இயலாது. எனவே, அடுத்த தோ்தலுக்கு முன்பு இந்த கோரிக்கை தொடா்பாக மனுதாரா் அறக்கட்டளை தோ்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.